ஆட்சிஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை

அச்சிறுபாக்கம் ஆட்சிஸ்வரர் கோவிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள புகழ்பெற்ற அச்சிறுப்பாக்கம் இளங்கிளியம்மன் உடனுறை ஆட்சிஸ்வரர் திருக்கோவிலில் வரலாற்று சிறப்புமிக்க இரு கருவறைகள் உள்ளது. இத்திருக்கோவிலில் ஆங்கில புத்தாண்டு முன்னிட்டு அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். விழாவில் மூத்த அர்ச்சகர் சங்கர் சிவாச்சாரியார் தலைமையில் சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனைகள் செய்யப்பட்டது. இவ்விழாவில் திரலான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.




Tags

Next Story