நவ ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு பூஜை

நவ ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு பூஜை

அனுமன் ஜெயந்தி விழா

சேலம் மாவட்டம்,ஸ்ரீ நவ ஆஞ்சநேயர் கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சேலம் மாவட்டம், சங்ககிரி, சந்தைபேட்டை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ நவ ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது. அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஸ்ரீ நவ ஆஞ்சநேயர் சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், திருமஞ்சனம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருள்களைக்கொண்டு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்ற பின்னர் சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். பின்னர்ஸ்ரீ நவ ஆஞ்சநேயா டிரஸ்ட் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story