பழையபாளையம் நஞ்சுண்டேஸ்வரர் கோவில் சிறப்பு பூஜை!

பழையபாளையம் அருள்மிகு நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயிலில் மண்டலாபிஷேக சிறப்புப் பூஜை நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டம், S. பழையபாளையம் அருள்மிகு ஸ்ரீ பார்வதி அம்பிகை உடனுறை நஞ்சுண்டேஸ்வரர் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் கடந்த மார்ச் மாதம் 27-ந் தேதி நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து கோவிலில் 48 நாட்கள் மண்டலாபிஷேக பூஜை உபயதாரர்கள் மூலம் நடைபெற்று வந்தது. அதன் நிறைவு நாள் பூஜையானது இன்று செவ்வாய்க்கிழமை (மே-14) மஹா ருத்ராபிஷேகம், 108 வலம்புரி சங்குபூஜை காலை 7.00 மணிக்கு விநாயகர் வழிபாட்டு உடன் தொடங்கியது... தொடர்ந்து புண்யாகம், பஞ்சகவ்யம், ருத்ர ஏகாதசி ஜெபம். பாராயணம், 108 வலம்புரி சங்கு பூஜை, ருத்ர ஹோமம், வசோத்தாரா ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை முடிந்து மதியம் சிவபெருமானுக்கு பாலாபிஷேகம், ருத்ராபிஷேகம், 108 சங்காபிஷேகம் பூஜை, தீபாராதனை நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை அருள்மிகு நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் மற்றும் நிர்வாகிகள் /ஊர் பொதுமக்கள் மற்றும் உபயதாரர்கள் செய்திருந்தனர். தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு திருக்கோயில் வளாகத்தில் திருவிளக்கு பூஜை நடைபெற உள்ளது. விருப்பமுள்ள ஆன்மீக அன்பர்கள் தொடர்பு கொள்ள செல் நம்பர் 97879 28473, 6383857136

Tags

Next Story