ஸ்ரீநித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை

ஸ்ரீநித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில்  சிறப்பு பூஜை

சிறப்பு அலங்காரம்

நாமக்கல் மாவட்டம்,ராசிபுரம் அருள்மிகு ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் அமாவாசை சிறப்பு அலங்காரம் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மற்றும் அமாவாசை போன்ற தினங்களில் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி தை அமாவாசை வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீநித்திய சுமங்கலி மாரியம்மன் சாமிக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர் போன்ற பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் செய்து தங்க முகம் வெள்ளி காப்பு ஆதிபராசக்தி அம்மன் அலங்காரத்தில் காட்சியளித்தார்.

தொடர்ந்து மகா தீபாரணை அம்மனுக்கு காட்டப்பட்டது. தை அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இந்த சிறப்பு அலங்காரத்தை கோவில் பூசாரிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags

Next Story