முருகன் கோயில்களில் சிறப்பு பூஜை

பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் ஆனி மாத செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
பரமத்தி வேலூர் தாலுகா பிலிக்கல்பாளையம் கரட்டூர் அருள்மிகு விஜயகிரி வடபழனி ஆண்டவர்,கபிலர்மலை குழந்தை வடிவேலன்,பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோயில் சுப்ரமணியர் ஆகிய திருக்கோவிலில் ஆனி மாதம் செவ்வாய்கிழமையை முன்னிட்டு நேற்று மூலவர் முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக சுவாமிக்கு பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், மஞ்சள், சந்தனம், விபூதி உள்ளிட்ட வாசனை திரவியங்களில் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபம் காண்பித்த பின் திரிசதி அர்ச்சனை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பட விளக்கம்:பிலிக்கல்பாளையம் கரட்டூர் அருள்மிகு விஜயகிரி வடபழனி ஆண்டவர் சிறப்பு அலங்காரத்தில்.

Tags

Next Story