பங்குனி பொங்கல் வருவதையொட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜை

பங்குனி பொங்கல் வருவதையொட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜை

சிறப்பு பூஜை 

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் பங்குனி பொங்கல் வருவதையொட்டி அம்மனுக்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி நகரின் மைய பகுதியில் அமைந்துள்ள மிகவும் பிரசித்திப்பெற்ற இந்து நாடார் மகிமை பண்டுக்கு சொந்தமான அருள்மிகு ஸ்ரீமாரியம்மன் கோவிலில் வரும் மாதம் நடைப்பெறும் பங்குனி பொங்கல் நடத்துவது குறித்து அருள்மிகு ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவிலில் குறி கேட்கும் வைபவம் வரும் (17-03-2024 )ஆம் தேதி ஞாயிற்று கிழமை நடைப்பெற இருக்கிறது,

அதற்கு முன்னோடியாக சிவகாசி பஜார் கடைக்கோவில் மகிமை பண்டுக்கு சொந்தமான மண்டபத்தில் வைத்து அருள்மிகு ஸ்ரீபத்திரகாளியம்மன், ஸ்ரீமாரியம்மனுக்கு அபிஷேகம் செய்து,மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைப்பெற்றன.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிப்பட்டு சென்றனர்.

பின்னர் கோவில் நிர்வாகம் சார்பாக அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டன.நிகழ்ச்சக்கான அனைத்து ஏற்பாடு இந்து நாடார் உறவின்முறை மகிமை பண்டை சேர்ந்த நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags

Next Story