ஸ்ரீ நித்திய சுமங்கலி அம்மனுக்கு சிறப்பு பூஜை

தை மாத மக நட்சத்திரத்தில் ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் திருக்கோயில் உள்ளது. கோவிலில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மற்றும் அமாவாசை மேலும் ஆடி மாதம் போன்ற நாட்களில் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் க்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி தை மாத மக நட்சத்திரத்தில் அம்மனின் சிம்ம ராசியில் பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் ஆன பால், தயிர், மஞ்சள், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர் போன்ற வாசனை திரவியங்களால் அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் வெள்ளி காப்பு மஞ்சள் அலங்காரம் சாத்தப்பட்டு மகா தீபாரணை காட்டப்பட்டது. இந்த சிறப்பு அலங்காரத்தை கோவில் பூசாரி மணி அவர்கள் சிறப்பாக செய்திருந்தார். ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மனை ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

Tags

Next Story