ஆறகளூர் காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை

ஆறகளூர் காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை

சிறப்பு பூஜை 

ஆறகளூர் காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சேலம் மாவட்டம் தலைவாசல் ஒன்றியம் ஆறகளூர் ஊராட்சியில் காமநாதீஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள அஷ்ட காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி நேற்று சிறப்பு பூஜை நடந்தது. இதையடுத்து சாமிக்கு பால், பன்னீர், இளநீர், தேன், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அலங்காரம், மகாதீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விளக்கு ஏற்றி சாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story