சிவனை குளிர்வித்த பிரதோஷம் - திரளான பக்தர்கள் தரிசனம்

சிவனை குளிர்வித்த பிரதோஷம் - திரளான பக்தர்கள் தரிசனம்

சிறப்பு பூஜை 

சங்ககிரி சோமேஸ்வரர் கோயிலில் பிரதோஷ சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சேலம் மாவட்டம், சங்ககிரி, மலையடிவாரம் பகுதியில் உள்ள அருள்மிகு சோமேஸ்வரர் கோயிலில் பிரதோஷத்தையொட்டி சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர்,நந்தி பகவான் உற்சவமூர்த்தி சுவாமிக்கு பால், தயிர்,சந்தனம்,திருமஞ்சனம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திவ்ய திரவிய பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேக, பூஜைகள் நடைபெற்ற பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அருள்மிகு சோழீஸ்வரர் உடனமர் சொளந்தரநாயகி நந்தி பகவான் சுவாமிகளை வழிபட்டு சென்றனர்.

Tags

Next Story