சோழீஸ்வரர் கோவிலில் பௌர்ணமி சிறப்பு பூஜை

சோழீஸ்வரர் கோவிலில் பௌர்ணமி சிறப்பு பூஜை

சிறப்பு பூஜை 

சங்ககிரி அருகே அரசிராமணி சோழீஸ்வரர் கோயிலில் பௌர்ணமி சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட அரசிராமணி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு சோழீஸ்வரர் கோவிலில் வைகாசி மாத பௌணர்மியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. வைகாசி மாத பௌணர்மியையொட்டி பெரியநாயகி அம்மன் உடனமர் சோழீஸ்வரர் சுவாமிகளுக்கு பால், தயிர், திருநீறு, சந்தனம், திருமஞ்சனம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திரவிய பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் பெண்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவன் பாடல்களை பாடி சுவாமிகளை வழிப்பட்டனர்.
Next Story