சிறப்புத் தொழுகை!

சிறப்புத் தொழுகை!

புதுக்கோட்டை தவ்ஹீத் ஜமா அத் சார்பில் மழை பெய்ய வேண்டி சிறப்புத் தொழுகை நடைபெற்றது.


புதுக்கோட்டை தவ்ஹீத் ஜமா அத் சார்பில் மழை பெய்ய வேண்டி சிறப்புத் தொழுகை நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம், முக்கண்ணாமலைப்பட்டியில் தவ்ஹீத் ஜமா அத் சார்பில் மழை பெய்ய வேண்டி சிறப்புத் தொழுகை நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் மழைப் பொழிவு இல்லாமல் வறன்ட நிலை காணப்பட்டு வருகிறது. இதனால், விவசாயிகள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மழை இல்லாத காலங்களில் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபடுவது வழக்கம். இதன்படி, தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் முக்கண்ணாமலைப்பட்டி கிளை சார்பாக இரண்டு இடங்களில் இஸ்லாமியர்களின் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இதில், நூற்றுக்கணக்கான ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இதில், மாவட்ட பொருளாளர் ரபீக் ராஜா, கிளைத் தலைவர் ஜக்கரியா, செயலாளர் நவ் ஃபுல், பொருளாளர் மைதீன், பஷீர் அலி இம்ரான், மாவட்ட தொண்டரணி காஜா மைதீன் கிளைத் தலைவர் நசீர், செயலாளர் அமானுல்லா,பொருளாளர் ஜாபர் அலி, உமர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story