மழை வேண்டி திருப்புவனத்தில் சிறப்புத் தொழுகை

மழை வேண்டி திருப்புவனத்தில் சிறப்புத் தொழுகை

திருப்புவனத்தில் மழை வேண்டி சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

திருப்புவனத்தில் மழை வேண்டி சிறப்புத் தொழுகை நடைபெற்றது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிகபட்சமாக 110 டிகிரி வரை வெயிலின் தாக்கம் பதிவாகி வருகிறது. இதனால் தமிழகத்தில் உள்ள நீர் நிலைகள் அனைத்தும் வற்றி, வறண்டு காணப்படுகிறது. கடுமையான வறட்சி நிலவி வருகிறது. கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் விடுபட வேண்டியும், மழை பெய்து நீர்நிலைகள் நிரம்பி பசுமையான சூழ்நிலை உருவாக வேண்டியும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கட்சியின் சார்பில் இஸ்லாமியர்கள் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் புதூர் தவ்ஹீத் பள்ளி வளாகம் பகுதியில் பகுதியில் திறந்தவெளியில் மழை வேண்டி சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர்.

Tags

Next Story