மழை வேண்டி சிறப்பு தொழுகை

மழை வேண்டி சிறப்பு தொழுகை

 சிறப்பு தொழுகை 

தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் மழை வேண்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது.
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மக்கா நகர் கிளை சார்பாக மழை வேண்டி தொழுகை மக்கா நகர் மர்கஸ் முன்பாக நடைபெற்றது. இதில் மேலாண்மை குழு உறுப்பினர் சகோதரர் அப்துல் நாசர் சிறப்பு தொழுகை நடத்தி வைத்தார்கள். இந்தத் தொழுகையில் ஏராளமான தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மக்கா நகர் கிளை உறுப்பினர்கள் உள்ளிட்ட ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டு மழை வேண்டி துவா செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது .

Tags

Read MoreRead Less
Next Story