மழை வேண்டி சிறப்புத் தொழுகை

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

 விருதுநகரில் முஸ்லீம் முன்னேற்றக் கழகம் சார்பில் தமிழகத்தில் மழை பெய்ய வேண்டி சிறப்பு தொழுகை நடந்தது.  

விருதுநகரில் முஸ்லீம் முன்னேற்றக் கழகம் சார்பில் தமிழகத்தில் மழை பெய்ய வேண்டி சிறப்பு தொழுகை நடந்தது.
தமிழக முழுவதும்கடந்த சில மாதங்களாக கத்திரி வெயில் சுட்டெரித்து வரும் நிலையில்பொதுமக்கள் வெயிலின் தாக்கததால் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். அதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு சமூக ஆர்வலர்களும், அரசியல் கட்சியினரும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தண்ணீர், நீர், மோர், பந்தல் அமைத்து சமூக சேவை செய்து வருகின்றனர். மேலும் கடவுள்களை வேண்டி பல்வேறு பிராத்தனைகளும் செய்து வருகின்றனர். அதனை முன்னிட்டு இன்று விருதுநகர் அகமதுநகரில்அமைந்துள்ளஹாஜி சிக்கந்தர் நடுநிலைப் பள்ளியில் வைத்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் நகர தலைவர் இக்க்ஷானுல்லா தலைமையில் 100க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டுமழை பெய்ய வேண்டி இறைவனை வழிபட்டு சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்

Tags

Read MoreRead Less
Next Story