பெரிய பள்ளிவாசல் பகுதியில் சிறப்பு தொழுகை

பெரிய பள்ளிவாசல் பகுதியில் நடந்த சிறப்பு தொழுகையில் இஸ்லாமியர்கள் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் நடைபெற்ற முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்றார். இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் தனக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக விருதுநகர் பகுதியில் இன்று விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் வீதி வீதியாக பகுதியாக சென்று வாக்காளர் களுக்கு நன்றி தெரிவித்தார்.

முன்னதாக பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு விருதுநகர் பெரிய பள்ளிவாசல் பகுதியில் நடந்த சிறப்பு தொழுகையில் இஸ்லாமியர்கள் ஈடுபட்டனர். அங்கு சென்ற விருதுநகர் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கலந்து கொண்டார். அதன் பின்பு அங்கிருந்த இஸ்லாமிய வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும் நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் நாடாளுமன்றத் தேர்தலில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக விருதுநகர் தொகுதியில் 1000 இடங்களில் மூன்று மாதங்களில் நன்றி தெரிவிக்க இருப்பதாக தெரிவித்தார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாதது குறித்து எழுப்பிய கேள்விக்கு (மோடி அமித்ஷா ) முதலாளிகள் என்ன சொன்னார்களோ அதை அப்படியே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்துள்ளார். பிரதமர் மோடி அமித்ஷா அளித்த கட்டளையை எடப்பாடி பழனிச்சாமி நிறைவேற்றி உள்ளார். நாடாளுமன்றத்தில் உங்களது முதல் குரல் என்னவாக இருக்கும் என்று கேள்விக்கு சிவகாசி பட்டாசு தொழிலுக்கு ஏற்பட்டுள்ள சிக்கலை மீட்டெடுக்க முயற்சிப்பேன் என்றும் ஜி. எஸ். டி .ஆல் பாதிக்கப்பட்டுள்ள சிறு வியாபாரிகள் குரலாகவும் ஜிஎஸ்டி வரியை குறைக்க நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன் என்றும் தெரிவித்தார்.

சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்களை ஜாதிய தலைவராக மாற்றி வருவதாக ஆளுநர் ரவி கருத்து தெரிவித்துள்ளது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர் ஜாதி மற்றும் மத அரசியலை செய்வது ஆர் எஸ். எஸ். ல்தான் உள்ளது. ஆர். எஸ். எஸ் வழியில் வந்த ஆளுநர் ரவி எங்களுக்கு பாடம் எடுக்கக் கூடாது. சாதி மற்றும் மதத்தை வைத்து பாஜக அரசியல் செய்கிறது. சுதந்திர போராட்டத் தியாகிகள் பற்றி பேச பாஜகவுக்கு தகுதி இல்லை. மேலும் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தலைவர்கள் அனைவரும் சுதந்திரப் போராட்ட தியாகிகள். தமிழக மக்கள் மனதில் பாஜக காலுன்றி உள்ளதாக பாஜகவின் வானதி சீனிவாசன் கருத்து தெரிவித்துள்ள தொடர்பான கேள்விக்கு பதில் அளித்தவர் ரவுடிகள் உதவியோடு அரசியல் செய்கின்றனர்.

ரவுடிசம் 420 உள்ளிட்ட குற்ற வழக்கு உடைய நபர்களை பாஜகவில் இணைத்துள்ளனர். பாஜக என்பது ரவுடிகளின் கட்சியாக மாறி உள்ளது அவர்களது கட்சியைச் சேர்ந்த முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ள கருத்தை ஏற்றுக்கொள்கிறேன். அண்ணாமலை பாஜகவின் தலைவராக வந்த பின்னர் பாஜக ரவுடிசம் மிகுந்த கட்சியாக மாறி உள்ளது. காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகைக்கும் முன்னாள் தலைவர் இ வி கே எஸ் இளங்கோ வணக்கம் கருத்து முரண்பாடு ஏற்பட்டது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்தவர் காங்கிரஸ் கட்சி ஜனநாயக கட்சி.‌ கருத்து மோதல் என்பது காங்கிரஸ் கட்சியில் ஜனநாயக பூர்வமாக நடைபெற்று வருகிறது.

செல்வப் பெருந்தகை கருத்தும் ஈ வி கே எஸ் இளங்கோவன் அவர்களது கருத்தும் ஒரே கருத்து தான். கருத்து சொல்லுகின்ற விதம் மாறி உள்ளது. நெல்லை மாவட்ட காங்கிரஸ் பிரமுகர் ஜெயக்குமார் மரண வழக்கில் ஆரம்பத்தில் அதிகம் குரல் கொடுத்த காங்கிரஸ் தற்போது ஒன்றும் பேசாமல் இருந்து வருகிறது என கேள்விக்கு பதில் அளித்தவர் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் கோரிக்கை என்பது நியாயமான நேர்மையான விசாரணை தேவை என்று கூறியுள்ளோம். தமிழக காவல்துறை தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது. வழக்கு சிபிசிஐடி மாற்றப்பட்டிருக்கிறது. எங்களுடைய திறமையான அதிகாரிகள் குற்றவாளிகளை கைது செய்வார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என தெரிவித்தார். பேட்டி:- மாணிக்கம் தாகூர் (பாராளுமன்ற உறுப்பினர்) - விருதுநகர்

Tags

Next Story