பக்ரித பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை

விருதுநகரில் தியாக திருநாளாம் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 500க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
இந்தியா முழுவதும் இன்று பக்ரித் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமிய சொந்தங்களுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழகத்திலும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர். இஸ்லாமியர்களும் இறைவனை வேண்டி சிறப்பு தொழுகைகளை நடத்தி வருகின்றனர். அதனை முன்னிட்டு இன்று விருதுநகரில் உள்ள பெரிய பள்ளி வாசல் வளாகத்தில் வைத்து 500 க்கும் மேற்பட்ட இஸ்லாமிய சொந்தங்கள் இறைவனை வழிபட்டு சிறப்பு தொழுகை நடத்தினர்

Tags

Next Story