திண்டுக்கல் : நாளை சிறப்பு தனியார் வேலைவாய்ப்பு முகாம்

திண்டுக்கல் : நாளை சிறப்பு தனியார் வேலைவாய்ப்பு முகாம்

தனியார் வேலைவாய்ப்பு முகாம் 

காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை முகம நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது
திண்டுக்கல் மாவட்டத்தில் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு சிறப்புத் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் திண்டுக்கல் மாவட்டம் பழனி, அருள்மிகு பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் 02.12.2023 (சனிக்கிழமை) அன்று காலை 8.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை நடைபெறவுள்ளது. இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று வேலைநாடுநர்களைத் தேர்வு செய்ய உள்ளனர். இம்முகாமில் 18 வயதுக்கு மேற்பட்ட எட்டாம் வகுப்பு முதல் ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு மற்றும் பொறியியல் படித்த இளைஞர்கள் பங்கேற்று, தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பினை பெறலாம் விருப்பமுள்ளவர்கள் கல்விச்சான்று, குடும்ப அட்டை ஆதார்அட்டை, ஓட்டுநர் உரிமம் அடையாள அட்டை, சுய விவரக் குறிப்பு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ நகலுடன் கலந்து கொள்ளலாம்.என மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story