காவிரி தாய்க்கு இரவில் சிறப்பு பூஜை

காவிரி தாய்க்கு  இரவில் சிறப்பு பூஜை

காவிரித்தாய்க்கு சிறப்பு பூஜை

மேட்டூரில் காவிரி தாய்க்கு இரவில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
மேட்டுரை வந்தடைந்த காவிரி விழிப்புணர்வு துலா யாத்திரை ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அகில பாரதிய சன்னியாசிகள் சங்கமும் அன்னை காவிரி நதிநீர் பாதுகாப்பு அறக்கட்டளையும் இணைந்து காவிரி விழிப்புணர்வு தீர்த்த ரத யாத்திரை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. கடந்த 19-ம் தேதி கர்நாடக மாநிலம் தலைக்காவிரியில் தொடங்கிய யாத்திரை நேற்று இரவு மேட்டூர் நான்கு ரோடு காவிரி ஆற்றுக்கு வந்தடைந்தது. அங்கு காவிரி தாய்க்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். காவிரியை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை மக்களிடையே ஏற்படுத்துவதற்காக இந்த விழிப்புணர்வு யாத்திரை 13 ஆண்டுகளாக நடைபெறுகிறது.

Tags

Next Story