ராமநாதபுரம் : விஜயகாந்த் நலம்பெற வேண்டி சிறப்பு பூஜை

ராமநாதபுரம் : விஜயகாந்த் நலம்பெற வேண்டி சிறப்பு பூஜை

விஜயகாந்த் நலம்பெற வேண்டி சிறப்பு பூஜை

ராமநாதபுரம் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டி ஸ்ரீ வராகி அம்மன் ஆலயத்தில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான கேப்டன் விஜயகாந்த் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பதிவில் சேர்க்கப்பட்டு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இதனால் கட்சியினர் மற்றும் நல விரும்பிகள் பல்வேறு சிறப்பு பிரார்த்தனைகளை அவ்வப்போது செய்து வருகின்றனர் ராமநாதபுரம் மாவட்டம் திரு உத்தரகோசமங்கை பகுதியில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற சுயம்புவாக உருவான ஸ்ரீ வராகி அம்மன் ஆலயத்தில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதில் மனிதநேய தலைவர் கேப்டன் விஜயகாந்த் அறக்கட்டளையின் தலைவர் முருகன் ராமலட்சுமி தலைமையில் ஏராளமான விஜயகாந்த் தொண்டர்கள் நற்பணி மன்றத்தினர் சிறப்பு பூஜையில் கலந்து கொண்டனர. விஜயகாந்த் பூரண நலம் பெற்று மீண்டும் கட்சி பணி ஆற்ற வேண்டும் என்று ஸ்ரீ வராகி அம்மன் ஆலயம் மற்றும் மங்களநாத சுவாமி ஆலயத்தில் மனம் உருகி தேமுதிக மற்றும் சமூக அறக்கட்டளை தொண்டர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர் பல்வேறு வெளிநாடுகளில் உள்ள விஜயகாந்த் மீது பற்று கொண்ட சமூக ஆர்வலர்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Tags

Next Story