அங்காளம்மனுக்கு சிறப்பு பூஜை திரளான பக்தர்கள் தரிசனம்

அங்காளம்மனுக்கு சிறப்பு பூஜை திரளான பக்தர்கள் தரிசனம்

சிறப்பு பூஜை 

கல்வடங்கம் அங்காளம்மனுக்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
சேலம் மாவட்டம்,சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட கல்வடங்கம் காவிரி ஆற்றங்கரை ஓரத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அங்காளம்மன் கோவிலில் வைகாசி கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி அங்காளம்மனுக்கு அதிகாலை முதலே பால், தயிர், சந்தனம், திருமஞ்சனம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திவ்ய திரவிய பொருளைக் கொண்டு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்ற பின்னர். மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த திரளான பக்தர்களுக்கு கலந்து கொண்டு அருள்மிகு அங்காளம்மன் சுவாமியை வழிபட்டு சென்றனர்.

Tags

Next Story