தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கால பைரவருக்கு சிறப்பு பூஜை

பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கால பைரவருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
பெரம்பலூர் நகரில் உள்ள ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் தனி சன்னதியில் உள்ள காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ஜூன் 28ஆம் தேதி இரவு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து தீபாரதனை காண்பிக்கப்பட்டது. பூஜைகளை கௌரிசங்கர் சிவாச்சாரியார் செய்து வைத்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் கோவிந்தராஜன் முன்னாள் அறங்காவலர் வைத்தீஸ்வரன் செய்திருந்தனர் இதில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்

Tags

Next Story