காலபைரவருக்கு சிறப்பு பூஜை

காலபைரவருக்கு சிறப்பு பூஜை

 சங்ககிரி சுற்றியுள்ள பகுதிகளில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவர் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.  

சங்ககிரி சுற்றியுள்ள பகுதிகளில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவர் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.
சேலம் மாவட்டம் சங்ககிரி பகுதிகளில் உள்ள கோவில்களில் தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அன்னதானப்பட்டி பூத்தாலகுட்டை பூத்தாழீஸ்வரர் கோவிலில் உள்ள காலபைரவருக்கு பால், தயிர், சந்தனம், திருமஞ்சனம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திவ்ய திரவிய பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்ற பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதேபோல் சங்ககிரியை அடுத்த ஈரோடு பிரிவு சாலை பகுதி அருள்மிகு பாலமுருகன் கோவில் வளாகத்தில் உள்ள காலபைவர் சுவாமிகளுக்கும் சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றது. இரு கோவில்களில் நடைபெற்ற பூஜையில் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமிகளை வழிப்பட்டுச் சென்றனர்.

Tags

Next Story