பாண்டமங்கலம் அருகே ஸ்ரீகால பைரவருக்கு சிறப்பு பூஜை

பாண்டமங்கலம் அருகே ஸ்ரீகால பைரவருக்கு சிறப்பு பூஜை

சிறப்பு பூஜை

பாண்டமங்கலம் அருகே உள்ள கோப்பணம்பாளையத்தில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ஸ்ரீகால பைரவருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

பரமத்தி வேலூர் தாலுகா பாண்டமங்கலம் அருகே உள்ள கோப்பணம்பாளையத்தில் உள்ள மாசானி அம்மன் கோயிலில் பரிவார நெய்வமாக அமைந்துள்ள ஸ்ரீ கால பைரவருக்கு இன்று தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.

முன்னதாக சாமிக்கு பால்,நெய்,மஞ்சள்,திருமஞ்சல் மற்றும் திருநீறு உள்ளிட்ட வாசனை திரவியங்களில் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அலங்காரம் செய்யப்பட்டு ஸ்ரீ பைரவருக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.

Tags

Next Story