கும்பகோணத்தில் இல்லத்தரசிகளுக்கான சிறப்பு தற்காப்பு பயிற்சி

கும்பகோணத்தில் இல்லத்தரசிகளுக்கான சிறப்பு தற்காப்பு பயிற்சி

தற்காப்பு பயிற்சியில் கலந்து கொண்டவர்கள் 

கும்பகோணத்தில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இல்லத்தரசிகளுக்கான சிறப்பு தற்காப்பு பயிற்சி நடைபெற்றது.

கும்பகோணம் ஸ்ரீசரஸ்வதி பாடசாலை பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வினோத் டோரா டூ இஷின்றியூ கராத்தே சார்பில் இல்லத்தரசிகளுக்கான இலவச ஒரு நாள் தற்காப்பு சிறப்பு பயிற்சி இன்று காலை நடைபெற்றது.

தலைமை பயிற்சியாளர் கியோசி டி.ஆர்.வினோத் தலைமையிலும், ரென்சி கண்ணன் ஏற்பாட்டிலும் நடைபெற்ற இப்பயிற்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட இல்லத்தரசிகள் பங்கேற்று தற்காப்பு கலையின் தற்காப்பு பயிற்சிகளை (செல்ஃப் டிஃபன்ஸ்) சுமார் ஒரு மணி நேரம் பயிற்சி மேற்கொண்டனர். தொடர்ந்து பயிற்சியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கி பாராட்டப்பட்டது.

Tags

Next Story