விபத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பலி 2 பேர் கைது

விபத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பலி 2 பேர் கைது
விபத்தில் இறந்த ஜஸ்டின்
சுங்கான்கடை பகுதியில் விபத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பலி - 2 பேர் கைது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குமரி மாவட்டம் புதுக்கடை அருகே உள்ள கீழ்குளம் உசரத்து விளையை சேர்ந்தவர் ஜஸ்டின் (53). தக்கலை போக்குவரத்துக் காவல் பிரிவில் எஸ் ஐ - யாக உள்ளார். நேற்று முன் தினம் மாலை நாகர்கோவில் சென்று விட்டு தக்கலை நோக்கி பைக்கில் வந்து கொண்டிருந்த போது, சுங்கான்கடை பகுதியில் மினி லாரி மோதி பைக்குடன் கீழே விழுந்தார். அப்போது எதிரே வந்த டாரஸ் லாரியின் பின் டயரில் ஜஸ்டின் சிக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த சம்பவம் குறித்து இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து, அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சி ஆய்வு செய்து மினி லாரி டிரைவர் குமாரகோவில் பகுதியை சேர்ந்த சிவ குருநாதன் (37), டாரஸ் லாரி டிரைவர் அழகிய பாண்டிபுரம் பகுதியை சேர்ந்த முருகன் (47) என்பவர்களை போலீசார் கைது செய்து, வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story