சிவகாசிக்கு நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி சிறப்பு ரயில் - ரயில்வே அறிவிப்பு

சிவகாசிக்கு நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி சிறப்பு ரயில் - ரயில்வே அறிவிப்பு
சிவகாசி:நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி சிறப்பு ரயில் 
சிவகாசிக்கு நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் தென்காசி வழியாக தாம்பரம் - நெல்லை - தாம்பரம் சிறப்பு ரயில்கள் பாராளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் வாக்களிக்க வசதியாக ராஜபாளையம், தென்காசி, பாவூர்சத்திரம், அம்பை வழியாக தாம்பரம் - திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. தாம்பரம் - திருநெல்வேலி சிறப்பு ரயில் (06007) ஏப்ரல்18 அன்று தாம்பரத்தில் இருந்து,

இரவு 09.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.15 மணிக்கு திருநெல்வேலி சென்று சேரும். மறு மார்க்கத்தில் திருநெல்வேலி-தாம்பரம் சிறப்பு ரயில் (06008) ஏப்ரல் 19 அன்று திருநெல்வேலியில் இருந்து இரவு 07.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 08.45 மணிக்கு தாம்பரம் சென்று சேரும்.இந்த ரயில்கள் சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி,

அம்பாசமுத்திரம்,பாவூர்சத்திரம், தென்காசி,கடையநல்லூர் பாம்பகோவில் சந்தை,சங்கரன்கோவில்,ராஜபாளையம்,சிவகாசி, திருத்தங்கல்,விருதுநகர், மதுரை,திண்டுக்கல்,திருச்சி, விருத்தாச்சலம்,விழுப்புரம்,

செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.இந்த ரயில்களில் 14 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள்,2 சரக்கு பெட்டியுடன் கூடிய ரயில் மேலாளர் பெட்டி ஆகியவை இணைக்கப்படும்.

Tags

Read MoreRead Less
Next Story