குரூப்-4 போட்டித் தேர்வுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு தொடக்கம்

குரூப்-4 போட்டித் தேர்வுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு தொடக்கம்

போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி முகாம்

போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி முகாம்
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி திருவள்ளுவர் கல்விக் கழகம் மற்றும் நகர வர்த்தகர் கழகம் சார்பில் குரூப் 4 போட்டித் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் பிப்.4 ஆம் தேதி ஞாயிறு அன்று தொடங்க உள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு வரும் ஜூன் 9 அன்று நடைபெற உள்ளது. இதற்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் பேராவூரணி நகர வர்த்தகர் கழக கட்டிடத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி நடைபெற உள்ளது. இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்தப் பயிற்சிக் கூடம் மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. பேராவூரணி அரசு கல்லூரி முதல்வர் முனைவர் திருமலைச்சாமி சிறப்புரை நிகழ்த்தி பயிற்சியை தொடங்கி வைக்கவுள்ளார். போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்ற அரசு அதிகாரிகள் பயிற்சி வழங்குகிறார்கள். சேர்க்கைக்கு திருவள்ளுவர் கல்விக் கழக பொறுப்பாளர்களை 9842609980, 6381618018 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Tags

Next Story