உள்தர உத்தரவாத மையத்தின் சிறப்பு பயிற்சி வகுப்பு

உள்தர உத்தரவாத மையத்தின் சிறப்பு பயிற்சி வகுப்பு

சிறப்பு பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டவர்கள்

உடற்கல்வித்துறை மற்றும் உள்தர உத்தரவாத மையத்தின் சிறப்பு பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் கலை அறிவியல் கல்லூரியில் உடற்கல்வித்துறை மற்றும் உள்தர உத்தரவாத மையத்தின்(Internal Quality Assurance Cell)சார்பாக அனைத்து மாணவ/மாணவியர்களுக்கும் மற்றும் பேராசிரியர்களுக்கும் “ Sportive Participation in Sports and Athletics” என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக பன்னாட்டு கைப்பந்து வீரரும் சென்னை இந்தியன் வங்கியின் மூத்த மேலாளருமாகிய திரு.A. மனோகரன் அவர்கள் கலந்து கொண்டு மாணவ/ மாணவியர்களுக்கு சிறப்புரை நிகழ்த்தினார். மாணவர்கள் அனைத்து விதமான விளையாட்டுப் போட்டிகளிலும் பங்கெடுப்பது முக்கியம் என்பதை குட்டி கதை கூறி விளக்கி கூறினார்.

இந்நிகழ்விற்கு அருள்மிகு அர்த்தநாரீசுவரர் திருக்கோயிலின் உதவி ஆணையரும் இக்கல்லூரியின் செயலருமாகிய திரு.மு. இரமணிகாந்தன் அவர்கள் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் முனைவர் கி.வெங்கடாசலம் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.

வரவேற்புரையை உடற்கல்வி இயக்குனர் முனைவர் ந.செந்தில்குமார் அவர்கள் வழங்கினார். சிறப்பு விருந்தினர் பற்றிய அறிமுக உரையைக் கணினிப் பயன்பாட்டில் துறை உதவிப்பேராசிரியர் முனைவர்.கனிமொழி சுகுணா அவர்கள் வழங்கினார். நன்றி உரையை உள்தர உத்தரவாத மையத்தின் ஒருங்கிணைப்பாளரும் ஆங்கிலத் துறை தலைவருமாகிய முனைவர்.எ.திருமலை ராஜா அவர்கள் வழங்கினார்.

இந்நிகழ்வில் கல்லூரியின் அனைத்து துறை தலைவர்கள், உதவிப்பேராசிரியர்கள், மாணவ,மாணவியர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story