விழுப்புரம்- திருவண்ணாமலை இடையே சிறப்பு ரயில்கள்

விழுப்புரம்- திருவண்ணாமலை இடையே சிறப்பு ரயில்கள்

பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு விழுப்புரம்- திருவண்ணாமலை இடையே இன்று சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு விழுப்புரம்- திருவண்ணாமலை இடையே இன்று சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

தென்னக ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் வினோத் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடை பெறும் பவுர்ணமி கிரிவலத்தில் பல்லாயிரக்கணக்கான பக் தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை யொட்டி பக்தர்கள் வசதிக்காக தென்னக ரெயில்வே சிறப்பு ரெயிலை இயக்குகிறது.

அதாவது விழுப்புரம் ரெயில் நிலையத்தில் இருந்து இன்று (வியாழக்கிழமை) காலை 9.15 மணிக்கு புறப்படும் விழுப்புரம்- திருவண்ணாமலை சிறப்பு ரெயில் (வண்டி எண் 06130) காலை 11மணிக்கு திருவண்ணாமலைக்கு சென்றடையும். இதேபோல் மறுமார்க்கத்தில் பகல் 12.40 மணிக்கு திருவண்ணாமலையில் இருந்து புறப்படும் திருவண்ணாமலை-விழுப்புரம் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06129) விழுப்புரத்துக்கு பிற்பகல் 2.15 மணிக்கு வந்தடையும். இந்த ரெயில்கள் வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சனூர், அண்டம்பள்ளம், தண்டரை ஆகிய ரெயில் நிலையங்களில் நின்றுசெல்லும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story