சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்

சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்

கால்நடை மருத்துவ முகாம்

திருவண்ணாமலஒ மாவட்டம், நாடழகனந்தல் ஊராட்சியில் வாழ்ந்து காட்டுவோம் திட்ட முகாம் மூலம் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.

வேட்டவலம் அருகே நாடழகனந்தல் ஊராட்சியில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.ஊராட்சி மன்ற தலைவர் ஏழுமலை தலைமை தாங்கினார். வாழ்ந்து காட்டுவோம் திட்ட தொழிற்சார் வல்லுநர் கௌசல்யா முன்னிலை வகித்தார். கால் நடை மருத்துவர் ராஜ்குமார் வரவேற்றார்.

சிறப்பு விருந்தினராக ஒன்றிய குழு உறுப்பினர் ராஜேந்திரன் முகாமினை தொடங்கி வைத்தார். முகாமில் கால்நடை மருத்துவர் ராஜ்குமார் தலைமையில் செயற்கை முறை கருவூட்டாளர்கள் சிவானந்தம், ஏழுமலை ஆகியோர் 300 கால்நடை களுக்கு தடுப்பூசி செலுத்தி, செயற்கை முறை கருவூட்டல், குடற்புழு நீக்கம், சுண்டுவாத அறுவை சிகிச்சை, மலடு நீக்க சிகிச்சை, உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகளை மேற்கொண்டனர்.முடிவில் ஊராட்சி செயலாளர் பச்சையப்பன் நன்றி கூறினார்.

Tags

Next Story