கள்ளக்குறிச்சியில் நாளை சிறப்பு கிராம சபை கூட்டம்

கள்ளக்குறிச்சியில் நாளை சிறப்பு கிராம சபை கூட்டம்

மாவட்ட ஆட்சியர் 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாளை 2 ம் தேதி சிறப்பு கிராம சபை கூட்டம் நடக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கலெக்டர் பிரசாந்த் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கனவு இல்லத் திட்டம் மற்றும் குடியிருப்பு பழுதுநீக்கம் செய்தல் திட்டத்தின் கீழ் தகுதியான பயனாளிகளை தேர்வு செய்து ஒப்புதல் பெறுவதற்கு நாளை 2ம் தேதிஅனைத்து கிராம ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடக்கிறது.

அதில், கனவு இல்ல திட்டத்தில் பல்வேறு கணக்கெடுப்புகளின் மூலம் சேகரிக்கப்பட்ட தகுதியான பயனாளிகள்ஒதுக்கீட்டிற்கான ஒப்புதல் பெறவுள்ளது.

அதேபோல் பழுதடைந்த ஊரக வீடுகளை சீரமைத்தல் திட்டத்தில் கடந்த2000-2001ம் ஆண்டிற்கு முன்பு கட்டப்பட்ட ஓட்டு வீடுகள் மற்றும் சாய்தள கான்கிரீட் வீடுகள் பழுதுநீக்கம் செய்வதுதொடர்பான கணக்கெடுப்பு விவரங்களை கள ஆய்வு செய்து தகுதியான பயனாளிகள் தேர்வு கிராம சபை கூட்டத்தில்ஒப்புதல் பெற உள்ளது. எனவே, மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம மக்களும் இச்சிறப்பு கிராம சபை கூட்டத்தில் பங்கேற்க வேண்டும்என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Tags

Next Story