வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாம்களில் சிறப்புப் பார்வையாளர் ஆய்வு 

வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாம்களில் சிறப்புப் பார்வையாளர் ஆய்வு 

சிறப்பு பார்வையாளர் ஆய்வு 

தஞ்சாவூர் மாவட்டத்தில், வாக்காளர் சிறப்பு முகாம்களில், வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் மற்றும் வேளாண்மை துறை ஆணையருமான இல.சுப்பிரமணியன், மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதியில், ஆடுதுறை கே.ஜி.எஸ் மேல்நிலைப் பள்ளி, திருவாடுதுறை ஆதீனம் மேல்நிலைப் பள்ளிகளிலும், கும்பகோணம் சட்டமன்றத் தொகுதியில், கும்பகோணம் செயிண்ட் ஆண்டனிஸ் மேல்நிலைப் பள்ளி, டான் அகாடமி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றிலும், பாபநாசம் சட்டமன்றத் தொகுதியில் ஸ்ரீ கோவிந்தசாமி மூப்பனார் உயர்நிலைப்பள்ளியிலும், திருவையாறு சட்டமன்றத் தொகுதியில், திருப்பழனம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பாலகணபதி வித்யாசாலா உதவி பெறும் தொடக்கப்பள்ளி ஆகிய இடங்களில், நேற்று நடைபெற்ற வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடர்பான வாக்காளர் சிறப்பு முகாம்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் மற்றும் வேளாண்மை துறை ஆணையர் இல.சுப்பிரமணியன், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். புதிய வாக்காளர்கள் விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து உள்ளார்களா எனவும், வாக்குச்சாவடி முகாம்களில் அடிப்படை வசதிகள் குறித்தும் ஆய்வு செய்தனர். அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் அலுவலர்கள் புதிய வாக்காளர் சேர்ப்பு பணியில் தமது பகுதிகளில் புதிய வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது, வருவாய் கோட்டாட்சியர்கள் பூர்ணிமா (குடந்தை), இலக்கியா (தஞ்சாவூர்), வட்டாட்சியர்கள் வெங்கடேசன் (கும்பகோணம்), பாக்கியராஜ் (திருவிடைமருதூர்) மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story