அயோத்தி சென்று திரும்பியவர்களுக்கு சிறப்பு வரவேற்பு

அயோத்தி சென்று திரும்பியவர்களுக்கு சிறப்பு வரவேற்பு

அயோத்தி சென்று திரும்பியவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது 

திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து 216 பக்தர்கள் அயோத்திக்கு ரயிலில் சென்று மீண்டும் இன்று திண்டுக்கல் வருகை தந்தனர்.

முதல் கட்டமாக திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து 216 பக்தர்கள் அயோத்திக்கு ரயிலில் சென்று மீண்டும் இன்று திண்டுக்கல் வருகை தந்தனர். பாரத பிரதமர் நரேந்திர மோடி,பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,பாஜக திண்டுக்கல் கிழக்கு மாவட்ட நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தனர். அப்போது அயோத்தி சென்று வந்தவர்கள் கூறியதாவது,

குழந்தை ராமரை தரிசித்து வந்ததில் நாங்கள் பெரு மகிழ்ச்சி கொள்கிறோம். எங்களுக்கு நல்ல வழிகாட்டியாக பாஜக இருந்தது. நாங்கள் இப்போதே சொர்க்கத்தை அடைந்து விட்ட பெருமை கொள்கிறோம். நல்ல தரிசனம் தங்குவதற்கு ஏற்பாடு என சிறப்பான வசதிகளை எங்களுக்கு செய்து கொடுத்த மாவட்ட பாஜகவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினார்.

Tags

Next Story