காஞ்சிபுரம் நாடாளுமன்ற அதிமுக வேட்பாளருக்கு சிறப்பு வரவேற்பு

காஞ்சிபுரம் நாடாளுமன்ற அதிமுக வேட்பாளருக்கு சிறப்பு வரவேற்பு
காஞ்சிபுரம் நாடாளுமன்ற அதிமுக வேட்பாளருக்கு சிறப்பு வரவேற்பு
காஞ்சிபுரம் நாடாளுமன்ற அதிமுக வேட்பாளருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதிமுக சார்பில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிடும் ராஜசேகருக்கு, செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியம் சார்பில் சார்பில் திருப்போரூர் பேருந்து நிலையம் அருகே அதிமுகவினர் பேண்டு வாத்தியத்துடன் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

பேருந்து நிலையம் அருகே உள்ள முன்னாள் முதல்வரும்,அதிமுக நிறுவனருமான எம்ஜிஆரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் தந்தை பெரியார் அண்ணல் காந்தியடிகள் ஆகியோரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்..

அதனை தொடர்ந்து ஊர்வலமாக சென்றவர் ரவுண்டானா அருகே உள்ள புரட்சியாளர் அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதுடன் நிர்வாகிகள் சால்வையுடன் மலர்மாலை அணிவித்தும், சந்தன மாலை அணிவித்தும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய வேட்பாளர் ராஜசேகர் கழகப் பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வர் தமிழக எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி என்னை வேட்பாளராக அறிவித்ததின் பேரில் காஞ்சிபுரம் பாராளுமன்ற தொகுதியில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும் வெற்றிக்கனியை புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா மற்றும் கேப்டன் விஜயகாந்த் ஆகியோருக்கு காணிக்கையாக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Tags

Next Story