காட்டுவனஞ்சூர் ராமபக்த ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு

காட்டுவனஞ்சூர் ராமபக்த ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு

அனுமன் ஜெயந்தி 

அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு காட்டுவனஞ்சூர் ராமபக்த ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
சங்கராபுரம் அருகே உள்ள காட்டுவனஞ்சூர் ஸ்ரீ ராமபக்த ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு 108 லிட்டர் பாலாபிேஷகம் நடந்தது. பின் ஆஞ்சநேய சுவாமிக்கு வடைமாலை, ஜாங்கிரி மாலை மற்றும் சந்தனக் காப்பு சாத்தப்பட்டது. தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

Tags

Next Story