முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு

முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு

 முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு

தலைவாசல் அருகே பாலசுப்பிரமணியசாமி கோவிலில் தைப்பூச திருவிழாவையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.
கெங்கவல்லி : சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் கெங்கவல்லி தலைவாசல் அருகே பழைய பாலசுப்பிரமணியசாமி கோவிலில் தைப்பூச திருவிழாவையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி சாமிக்கு பால், பன்னீர், இளநீர், தேன், சந்தனம், பஞ்சாமிர்தம், திருநீறு உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் கந்த சஷ்டி, திருப்புகழ் பாடி வழிபட்டனர். பக்தர்கள் காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சாமி குழந்தை வடிவில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழா குழு சார்பில் பக்தர்களுக்கு பஞ்சாமிர்தம், அன்னதானம் வழங்கினர். இதேபோல் வரகூர் முருகன் கோவில், வீரகனூர் குமரன் மலை கோவில், சார்வாய் முருகன் கோவில், ஈச்சம்பட்டி பாலமுருகன் கோவில், புத்தூர் முருகன் கோவில் உள்ளிட்ட முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா நடைபெற்றது.

Tags

Next Story