சாய்பாபா கோவிலில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு!

நாமக்கல், சற்குரு நகர் சாய்பாபா கோவிலில் தை மாத முதல் வியாழக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.
நாமக்கல்,மோகனூர் ரோடு,சற்குரு நகர்,ஸ்ரீ லஷ்மி குபேர சீரடி சாயிபாபா ஆலயம் அமைந்துள்ளது. இங்கு நாள்தோறும் பாபாவிற்கு பூஜைகள் நடப்பது வழக்கம். குறிப்பாக பாபாவிற்கு உகந்த நாளான வாரந்தோறும் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடத்தப்படுவது வழக்கம். அதன்படி தை மாத முதல் வியாழக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீலஷ்மி குபேர சாயி பாபாவிற்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது.பாபாவிற்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றது.பின்னர் மாலையில் சிறப்பு பஜனையை தொடர்ந்து அனைவருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.இதில் நாமக்கல் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாயி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story