டிரினிடி அகாடமி மெட்ரிக் பள்ளியில் சிறப்பு வழிபாடு

டிரினிடி அகாடமி மெட்ரிக் பள்ளியில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

10,11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு டிரினிடி அகாடமி மெட்ரிக் பள்ளியில் அமைந்திருக்கும் ஸ்ரீ வித்யா கணபதி ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மாணவர்கள் தங்களது பெற்றோர்களுடன் வந்திருந்து ஸ்ரீ வித்யா கணபதி, ஸ்ரீ தட்சிணாமூர்த்தி, ஸ்ரீ பாலதண்டாயுதபாணி, ஸ்ரீ துர்க்கை, ஸ்ரீ சரஸ்வதி மற்றும் ஸ்ரீ ஹயக்ரீவர் ஆகிய தெய்வங்களை வழிபட்டு தாங்கள் பொதுத் தேர்வை நன்றாக எழுத வேண்டும் என்று பிராத்தனை செய்தனர். மாணவர்கள் தாங்கள் தேர்வு எழுத பயன்படுத்தும் பேனாவினை ஹயக்ரீவர் முன் வைத்து பூஜை செய்து பெற்றுக் கொண்டனர். இவ்விழாவிற்கு பள்ளியின் தலைவர் டாக்டர்.R.குழந்தைவேல் அவர்கள், செயலாளர் D.சந்திரசேகரன் அவர்கள், போக்குவரத்து செயலாளர் P.தயாளன் அவர்கள், பள்ளியின் முதல்வர் S.சோமசுந்தரம் அவர்கள், துணை முதல்வர் R.ரமேஷ் அவர்கள், ஆசிரியப் பெருமக்கள் மற்றும் பெற்றோர்கள் திரளாக வந்திருந்து இறையருள் பெற்றனர்.

Tags

Next Story