மோடி மீண்டும் பிரதமராக சிறப்பு வழிபாடு

மோடி மீண்டும் பிரதமராக வேண்டி, விருதுநகரில் சிறப்பு சங்காபிஷேக வழிபாடு நடந்தது.
பாரத பிரதமர் நரேந்திர மோடி பூரண உடல் நலத்துடன் தொடர்ந்து மூன்றாவது முறையாக 2024 ல் பிரதமராக பொறுப்பேற்று நல்லாட்சி செய்திடவும் மற்றும் மாநிலத் தலைவர் K.அண்ணாமலை பூரண உடல் நலத்துடன் என் மண் என் மக்கள் யாத்திரை அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றிடமும் விருதுநகர் - பாலவநத்தம் ஶ்ரீ கைலாசநாதர் திருக்கோவிலில் பாரதிய ஜனதா கட்சி விருதுநகர் கிழக்கு மாவட்டம் சார்பாக சங்கு பூஜை நடைபெற்றது. இந்த சிறப்புமிக்க பூஜையில் அனைத்து மண்டல தலைவர்களுக்கும் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்களுக்கும் பரிவட்டம் கட்டி பூஜை செய்தனர். தேசத்தின் அனைத்து வளமும் மென்மேலும் செழித்து நாட்டு மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழ இறைவனை வழிபாடு நடைபெற்றது.

Tags

Next Story