விஜயகாந்த் குணமடைய வேண்டி தேமுதிகவினர் சிறப்பு வழிபாடு

விஜயகாந்த் குணமடைய வேண்டி தேமுதிகவினர் சிறப்பு வழிபாடு

சிறப்பு வழிபாடு 

தேமுதிக தலைவர் விஜயகாந்த் குணமடைய வேண்டி மேலூர் தொகுதி தேமுதிக சார்பில் கோவிலில் சிறப்பு பூஜை செய்தும் கூட்டு பிரார்த்தனை செய்தும் வழிபாடு
மதுரை வடக்கு மாவட்ட தேமுதிக செயலாளர் ப. பாலச்சந்தர் ஆலோசனைப்படி, மேலூர் தொகுதி தேமுதிக சார்பில் விஜயகாந்த் பூரண நலம்பெற வேண்டி மேலூரில் உள்ள பழமைவாய்ந்த அருள்மிகு கல்யாண சுந்தரேஷ்வரர் காமாட்சியம்மன் திருக்கோவிலில் சிறப்பு பூஜை செய்தும் நெய் தீபம் ஏற்றியும் கூட்டுப்பிரார்த்தனை செய்து தொண்டர்கள் வழிபட்டனர். இந்நிகழ்ச்சியில் ஏ. ஆர். டி. ஆண்டிச்சாமி மாவட்ட கழக துணைசெயலாளர், வழக்கறிஞர் எஸ். பி. கே. சண்முக ராஜா. நகர் தலைவர் சே. சரவணன் மற்றும் ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story