அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு

சிறுவாச்சூர் அருள்மிகு ஸ்ரீமதுரகாளியம்மன் கோவிலில் பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.
பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 3ம் தேதி இன்று, பெரம்பலூர் சிறுவாச்சூர் அருள்மிகு ஸ்ரீமதுரகாளியம்மன் கோவிலின் சார்பில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு, பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் , மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் இராஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு, 500க்கும் மேற்பட்ட ஏழை எளிய பொதுமக்களுக்கு பொது விருந்து நடைபெற்றது இதில் கலந்து கொண்டவர்கள் பொதுமக்களுடன் அமர்ந்து உணவருந்தினர் மேலும் திருக்கோவிலின் சார்பில் 200 நபர்களுக்கு புடவைகளை ஏழை எளிய மக்களுக்கு வழங்கினார்கள் இந்நிகழ்வில் மாவட்ட அறங்காவல் குழு உறுப்பினர் பாஸ்கர், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story