சோனியாகாந்தி பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடு

திருப்பூர் ஈஸ்வரன்கோவிலில் சோனியாகாந்தி பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.

திருப்பூரில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி 77 வது பிறந்த நாளை முன்னிட்டு இளைஞர் காங்கிரஸ் கட்சி சார்பில் கோவிலில் சிறப்பு பிரார்த்தனை.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அன்னை சோனியா காந்தி அவர்களின் 77 -வது பிறந்த நாளை முன்னிட்டு திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஈஸ்வரன் கோவிலில் சோனியா காந்தி நீண்ட ஆயுளுடனும் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியை வழிநடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி சிறப்பு பிரார்த்தனை இளைஞர் காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளர் அருண் தலைமையில் நடைபெற்றது.

தொடர்ந்து சோனியா காந்தி பிறந்தநாளை கொண்டாடும் வகையில் கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கிருஷ்ணன் இனிப்புகளை வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளும் இளைஞர் காங்கிரஸ் கமிட்டியின் நிர்வாகிகளும் மகிலா காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story