கோட்டைக்கோவிலில் யுகாதி பண்டிகை முன்னிட்டு சிறப்பு வழிபாடு

தர்மபுரி கோட்டை பெருமாள் கோயிலில் யுகாதி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு, யுகாதி பண்டிகையை முன்னிட்டு தெலுங்கு மற்றும் கன்னடம் பேசும் மக்களால் விமரிசியாக கொண்டாடப்பட்டது.
தர்மபுரி அனைத்து நாயுடுகள் மகாஜன நலச்சங்கம் சார்பில் தர்மபுரி கோட்டை பரவாசுதேவ பெருமாள் கோயிலில் யுகாதி பண்டிகையை முன்னிட்டு தலைவர் பாண்டுரங்கன் தலைமையில் சிறப்பு வழிபாடு நடந்தது. நிகழ்ச்சியை முன்னிட்டு பரவாசு தேவ பெருமாளுக்கு 12 வகையான பொருட்களைக் கொண்டு தயிர் இளநீர் பன்னீர் பஞ்சாங்கம் விபூதி பால் தேன் இளநீர் பொருட்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெற்று, அதைத்தொடர்ந்து பெருமாளுக்கு சிறப்பு அர்ச்சனைகள் வழிபாடு நடைபெற்றது.இதில் பக்தர்கள் தரிசனம் பெற்றனர். இதையடுத்து பக்தர்களுக்கு போளி, சர்க்கரை பொங்கல், புளியோதரை உள்ளிட்டவை பிரசாதமாக வழங்கப்பட்டது. இதில், கௌரவ தலைவர் வெங்கடேசன், ராஜா, ஏகாம்பரம், வெங்கடேசபாபு, சிவராமன், ரவி, குப்புசாமி, சிவா, எத்திராஜ், நடராஜன், பூபதி, கிருஷ்ணகாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story