கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி

கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி
கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி நடைபெற்றது
பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் அவர்களின் 50 ஆவது நினைவு நாளை முன்னிட்டு மாவட்ட அளவிலான கல்லூரி பேச்சு போட்டி இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில், தந்தை பெரியார் அவர்களின் 50 ஆவது நினைவு நாளை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட் அளவிலான பேச்சுப் போட்டி விருதுநகர் மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி (சி.பி.ஐ.)அலுவலகத்தில் நடைபெற்றது. போட்டியில் வெவ்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 18 மாணவர்கள் பங்கேற்றனர். முதல் பரிசான ரூ 3000 மற்றும் நினைவு பரிசு சிவகாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவி பொன் நந்தினியும்,இரண்டாம் பரிசு,ரூ2000 மற்றும் நினைவு பரிசு விருதுநகர் செந்திக்குமார் நாடார் கல்லூரி மாணவர் இராமச்சந்திரனும்,மூன்றாம் பரிசாக ரூ1000மற்றும் நினைவு பரிசு அரசன் கணேசன் கல்வியியல் கல்லூரி மாணவி மகாதேவியும் பெற்றனர்.

பரிசுகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலாளர் முத்துக்குமார் வழங்கினார். சாத்தூர் நகர் மன்ற துணைத் தலைவர் பா.அசோக், விருதுநகர் வெ புகழேந்தி,அருப்புக்கோட்டை தங்கசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழா ஏற்பாடுகளை பெ.த.சண்முகசுந்தரம். தலைவர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம், பத்மநாபன்,செயலாளர், மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்,மா.பாரத் அமைப்பாளர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம், சண்முக நாதன்,செயலாளர் அருப்புக்கோட்டை நகர பகுத்தறிவாளர் கழகம். ஆதவன் மாவட்ட திராவிடர் கழக செயலாளர், கா நல்லதம்பி மாவட்ட திராவிடர் கழக தலைவர்,ஆகியோர் விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.

Tags

Next Story