திமுக சார்பில் மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி

திருப்பூரில் திமுக சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கான பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டியை சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மேயர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர்

கலைஞன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக மாணவரணி சார்பாக திருப்பூர் யூனியன் மில் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கிடையே மாநில அளவிலான பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டது. கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட இந்த பேச்சு மற்றும் கட்டுரை போட்டியை திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட செயலாளருமான செல்வராஜ் , மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர்.

இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு கலைஞரின் சிறப்புகள் மற்றும் கலைஞர் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் குறித்து சிறப்புரையாற்றினர். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் 88 ஆயிரம் மதிப்பிலான ஊக்கத்தொகைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திமுக மாணவர் அணியின் மாநில இணைச்செயலாளர் மோகன் , மாநிலத் துணைச் செயலாளர் பொன்ராஜ் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

Tags

Next Story