விருதுநகரில் விளையாட்டு போட்டி: மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைப்பு

விருதுநகரில் விளையாட்டு போட்டி:  மாவட்ட ஆட்சியர்  தொடங்கி வைப்பு
 விளையாட்டு போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்.
விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் கலைஞர் நூற்றாண்டு விழா விளையாட்டு போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்க மைதானத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாவட்ட அளவிலான இளைஞர்களுக்கான விளையாட்டு போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் துவக்கி வைத்தார்.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா முன்னிட்டு பல்வேறு துறைகள் மூலம் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 15 வயதிற்கு மேற்ப்பட்டவர்கள் மற்றும் 25 வயது உட்பட்டவர்களுக்கான கால்பந்து, கையுந்துபந்து விளையாட்டு போட்டிகள் இன்று நடைபெற்று வருகிறது.

இதில் கால்பந்து விளையாட்டு போட்டியில் 11 ஆண்கள் அணி மற்றும் 3 பெண்கள் அணி என மொத்தம் 252 நபர்களும், கபடி விளையாட்டு போட்டியில் 11 ஆண்கள் அணி மற்றும் 9 பெண்கள் அணி எனமொத்தம் 240 நபர்கள், கையுந்து பந்து விளையாட்டு போட்டியில் 8 ஆண்கள், 4 பெண்கள் அணி என மொத்தம் 144 நபர்கள் என ஆக மொத்தம் 636 நபர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story