தைப்பொங்கலையொட்டி விளையாட்டு விழா

தைப்பொங்கலையொட்டி விளையாட்டு விழா

பரிசளிப்பு 

சங்ககிரி வி.என்.பாளையத்தில் தைப்பொங்கலை முன்னிட்டு நடந்த விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
சேலம் மாவட்டம் சங்ககிரி வி.என்.பாளையம் யங்ஸ்டார் கிரிக்கெட் கிளப் சார்பில் தை பொங்கல் திருநாளையொட்டி 19வது ஆண்டாக நடைபெற்ற விளையாட்டு போட்டிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. யங்ஸ்டார் கிரிக்கெட் கிளப் சார்பில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளை வி.என்.பாளையம் மருத்துவர் ஜெகநாதன் தொடங்கி வைத்தார். வி.என்.பாளையம் சக்திமாரியம்மன் கோயில் வளாகத்தில் ஓட்டப்பந்தயம், கோணிப்பை ஓட்டம், கராத்தே, இசை நாற்காலி, குண்டு ஏறிதல், சிலம்பாட்டம், கயிறு இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது .இப்போட்டிகளில் இளைஞர்கள், ஊர்பொதுமக்கள் கலந்து கொண்டு விளையாடினர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சங்ககிரி பேரூராட்சி மன்ற உறுப்பினர் சண்முகம் பரிசுகளை வழங்கினார். போட்டிகளை யங்ஸ்டார் கிரிக்கெட் கிளப் இளைஞர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story