மயிலாடுதுறை அருகே இறந்து கிடந்த புள்ளிமான்

மயிலாடுதுறை அருகே இறந்து கிடந்த புள்ளிமான்

இறந்துகிடந்த புள்ளிமான் 

மயிலாடுதுறை அருகே இன்று அதிகாலை இறந்து கிடந்த புள்ளிமானை வனத்துறையினர் கைப்பற்றினர்
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் அருகே ஆறுபாதி கிராமத்தில் கலியமூர்த்தி என்பவரின் தோட்டத்தில் இருந்து சாலையை நோக்கி பாய்ந்த புள்ளிமான் ஒன்று கேட்டில் உள்ள கம்பி குத்தியதில் அங்கேயே விழுந்து உயிரிழந்ததுள்ளது. செம்பனார்கோவில் போலீசார் விசாரணை செய்து சீர்காழி வனத்துறையினருக்குத் தகவல் அளித்தனர். வனத்துறையினர் விசாரணை செய்து மானின் உடலைக் கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்கு பின் புதைக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story