மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் புள்ளிமான்: வைரல் வீடியோ

மழை வெள்ளத்தில் புள்ளிமான் அடித்துச் செல்லப்படும் காட்சி சோஷியல் மீடியாவில் வைரலாகி உள்ளது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக தொடர்ந்து கன மழை பெய்தது. இதன் காரணமாக அருப்புக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கண்மாய்கள் நீர்நிலைகள் நிறைந்து பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

அருப்புக்கோட்டை சுற்றியுள்ள காட்டு பகுதியில் புள்ளி மான்கள், காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இந்நிலையில் பந்தல்குடி ராம்கோ சாலையில் உள்ள ஆண்டிபட்டி கண்மாய் நீர்வழிப்பாதையில் மழை வெள்ளத்தில் புள்ளிமான் ஒன்று அடித்துச் செல்லப்பட்டது. இதை அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் செல்போனில் வீடியோவாக படம் எடுத்துள்ளனர்.

இந்த காட்சிகள் அனைத்தும் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி பரவி வருகிறது. கனமழை காட்டு விலங்குகளையும் வெகுவாக பாதித்துள்ளது.

Tags

Next Story