அரக்கோணம் அருகே மர்மமான முறையில் இறந்த புள்ளி மான்

அரக்கோணம் அருகே மர்மமான முறையில் இறந்த புள்ளி மான்
இறந்த மான்
அரக்கோணம் அருகே குடியிருப்பு பகுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்த புள்ளிமான் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே அரிகிலபாடி எம்.என்.ஆர். நகர் பகுதியில் புள்ளி மான் ஒன்று இறந்து கிடப்பதாக, வருவாய் அலுவலர்களுக்கும், அரக்கோணம் தாலுகா போலீசாருக்கும் அங்கிருந்தவர்கள் தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், மர்மமான முறையில் இறந்து கிடந்த மான் தண்ணீர் தேடி வழித்தவறி வந்து இறந்ததா? அல்லது வேறு காரணமா என விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story